..:: Money Spidery Financial Marketting ::.. Headline Animator

Friday, February 3, 2012

பங்குகள், கடன்பத்திரங்களில் ரூ.26,000 கோடி முதலீடு

அன்னிய நிதி நிறுவனங்கள், 2012 ஜனவரி மாதத்தில், இந்திய நிறுவனப் பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களில் மேற்கொண்ட முதலீடு ரூ.26000 கோடியை தாண்டி உள்ளது. கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஒரே மாதத்தில் இந்த முதலீடு மிகவும் அதிகரித்துள்ளது. இந்நிறுவனங்கள் ஜனவரி மாதத்தில் மொத்தம் ரூ.76,548 கோடி மதிப்பிற்கு பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களை வாங்கியுள்ளன. அதேசமயம், ரூ.50,219 கோடிக்கு விற்பனை செய்துள்ளன. இதனையடுத்து, நிகர முதலீடு ரூ.26,329 கோடியாக உயர்ந்துள்ளது. அன்னிய நிதி நிறுவனங்கள், ஜனவரி மாதத்தில் பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களில் மேற்கொண்ட நிகர முதலீடு முறையே ரூ.10,358 கோடி மற்றும் ரூ.15,971 கோடியாக உள்ளது.

No comments:

Post a Comment