..:: Money Spidery Financial Marketting ::.. Headline Animator

Monday, February 13, 2012

லலிதா ஜுவல்லரி தங்க நகை சேமிப்பு திட்டம்


சென்னை : லலிதா ஜுவல்லரி, "பிரீ கோல்டு' என்ற தங்க நகைக்கான, மாதாந்திர சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, மாதந்தோறும், 1,000, 2,000, 5,000, 10 ஆயிரம் அல்லது 15 ஆயிரம் ரூபாயை, வாடிக்கையாளர்கள், அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப இப்புதிய திட்டத்தில் சேமிக்கலாம். செலுத்தப்படும் தொகைக்கு ஏற்ப, உடனுக்குடன் வாடிக்கையாளர்கள் கணக்கில் தங்கம் ஒதுக்கீடு செய்யப்படும். இதனால், நாளுக்கு நாள் அதிகரித்து வரும், தங்க விலை உயர்விலிருந்து வாடிக்கையாளர்கள் தப்பித்து கொள்ள முடியும்.


மேலும், இத்திட்டம் நிறைவு பெறும் போது, கூடுதலாக சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின் முடிவில் தங்க நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, செய்கூலி, சேதாரம் மற்றும் வாட் வரி விதிப்பு இல்லை என்பது இத்திட்டத்தின் கூடுதல் சிறப்பம்சமாகும். இப்புதிய சேமிப்பு திட்டம், 18 மாத கால அளவு கொண்டதாகும்.

No comments:

Post a Comment